அருள்மிகு கூடலழகர் திருக்கோயில், மதுரை - 625001, மதுரை .
Arulmigu Koodalagar Temple, Madurai - 625001, Madurai District [TM031992]
×
Temple History
தல வரலாறு
தல வரலாறு
அருள்மிகு கூடலழகர் திருக்கோயில் வைணவ திவ்ய தேசங்கள் 108ல் 47வது திவ்ய தேசம் ஆகும். இத்திருக்கோயில் மூன்று நிலைகளைக் கொண்ட (அமர்ந்த, நின்ற, கிடந்த) அரிதிலும் அரிதான அஷ்டாங்க விமானத்துடன் அமையப்பெற்ற திருத்தலமாகும். இத்திருத்தலம் மதுரை மாநகரின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. சங்கத் தமிழ்வளர்த்த மாநகராம் மதுரை, தமிழ் நெறியோடு திருமால் நெறியினையும் போற்றி வளர்த்த பெருமை உடையது. பாண்டிய மன்னர்கள் பலர் திருமால் அன்பர்களாய் திகழ்ந்து, திருமாலுக்கு கோயில்களை எழுப்பினர். அத்திருக்கோயில்களில் தலையாயது கூடலழகர் திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் பாண்டிய நாட்டு திருப்பதிகள் பதினெட்டில் ஒன்றதாகத் திகழும் பெருமையுடையது.
திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் மற்றும் திருமழிசையாழ்வார் ஆகியோர்களால் மங்களாசாசனம் பாடல் பெற்ற...தல வரலாறு
அருள்மிகு கூடலழகர் திருக்கோயில் வைணவ திவ்ய தேசங்கள் 108ல் 47வது திவ்ய தேசம் ஆகும். இத்திருக்கோயில் மூன்று நிலைகளைக் கொண்ட (அமர்ந்த, நின்ற, கிடந்த) அரிதிலும் அரிதான அஷ்டாங்க விமானத்துடன் அமையப்பெற்ற திருத்தலமாகும். இத்திருத்தலம் மதுரை மாநகரின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. சங்கத் தமிழ்வளர்த்த மாநகராம் மதுரை, தமிழ் நெறியோடு திருமால் நெறியினையும் போற்றி வளர்த்த பெருமை உடையது. பாண்டிய மன்னர்கள் பலர் திருமால் அன்பர்களாய் திகழ்ந்து, திருமாலுக்கு கோயில்களை எழுப்பினர். அத்திருக்கோயில்களில் தலையாயது கூடலழகர் திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் பாண்டிய நாட்டு திருப்பதிகள் பதினெட்டில் ஒன்றதாகத் திகழும் பெருமையுடையது.
திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் மற்றும் திருமழிசையாழ்வார் ஆகியோர்களால் மங்களாசாசனம் பாடல் பெற்ற திருத்தலமாகும். திவ்ய பிரபந்த பாசுரங்களுக்குள் முதன்மையாக விளங்கும் திருப்பல்லாண்டு பாடப்பெற்ற திருத்தலமாகும்.
கூடல் என்பது முற்கால பாண்டியர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற தமிழ்ச் சங்கங்களில் புலவர்களின் கூடலைக் குறிக்கும். இதன் காரணமாக மதுரை மாநகர் கூடல் மாநகர் என அழைக்கப்பட்டது. இச்சங்கத்தில் கூடலழகரே துவரைக் கோமான் என்ற பெயரில் புலவராக வீற்றிருந்து தமிழ்ப்பணி செய்தது குறித்து மாங்குடி மருதனாரின் மதுரைக்காஞ்சி இலக்கியநூல் மூலம் அறியப்படுகிறது. துவரைக்கோமான் என்றழைக்கப்பட்ட பெருமாள், புலவர்கள் கூடலில் புதுமை அழகுடன் வீற்றிருந்ததால் கூடல்அழகர் என்ற திருநாமத்தில் அழைக்கப்பட்டார்.
சங்ககாலத்தில் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் கூடலழகருக்கு ஆவணி திருவோணத்தில் விழாக்கள் பல செய்து கூடலழகரை வழிபட்டு வந்ததாக தமிழ் இலக்கிய நூலான மாங்குடி மருதனாரின் மதுரைக்காஞ்சியில் அறியப்படுகிறது.
ஸ்ரீவல்லபதேவன் என்ற பாண்டிய மன்னன் ஆட்சிக் காலத்தில் பெரியாழ்வாரால் ஸ்ரீமந் நாராயணனே பரம் பொருள் என பரம்பொருள் நிர்ணய சபையில் மெய்பித்துக் காட்டிய வரலாற்று சிறப்புமிக்க திருத்தலமாகும்.
பதினொன்றாம் நூற்றாண்டில் இராமானுஜர் மதுரை மாநகருக்கு எழுந்தருளும் போது, மதுரை மத்தியில் அமைந்துள்ள இத்திருத்தலத்திற்கு எழுந்தருளி அருள்மிகு கூடலழகரை மங்களாசாசனம் செய்த போது வல்லபதேவ பாண்டியர் ஆட்சிக் காலத்தில் பெரியாழ்வாரால் திருப்பல்லாண்டு பாடப்பெற்ற இத்திருத்தலத்திற்கு திருப்பல்லாண்டு விளைந்த திவ்ய தேசம் என கொண்டாடி மகிழ்ந்தார்.
வைணவ ஆச்சார்யர் மணவாள மாமுனிகள் இருமுறை மதுரைக்கு எழுந்தருளி அருள்மிகு கூடலழகரை மங்களாசாசனம் செய்த தலமாகும். இச்செய்தி பிள்ளைலோகாச்சார்யர் அருளிச்செய்த யதீந்திர ப்ரணவ ப்ரபவம் என்னும் நூலிலிருந்து அறியப்படுகிறது.
மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களாகிய (16ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு வரை) திம்மப்ப நாயக்கர் மற்றும் எல்லப்ப நாயக்கர் ஆகியோர்கள் ஆட்சி காலத்தில் இத்திருத்தலத்திற்கு கொடிமர முன் மண்டபம் ஹேமஹபுஷ்கரணி (திருக்குளம்) மண்டபம் மற்றும் அஷ்டாங்க விமானத்தை புதுப்பித்தல் போன்ற திருப்பணிகள் செய்த விபரம் இத்திருக்கோயில் கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது.
தல பெருமை
தல புராணம்
அருள்மிகு கூடலழகர் தலபுராணம் பிரம்மாண்ட புராணத்தில் கதலீவன சேத்ரமகாத்மியத்தில் பன்னிரண்டு அத்தியாயங்களில் கூறப்பட்டிருக்கிறது, இப்புராணம் பிரம்மலோகத்தில் நாரதர் வேதவியாசருக்கு கூற, வேதவியாசர் சௌனகர் முதலிய ரிசிகளுக்கு அருளிச்செய்ததாக நைமிசாரணியத்தில் கூறப்படுகிறது. இப்புராணத்தில் இத்திருக்கோயிலின் அட்டாங்க விமானம் நிர்மாணிக்கப்பட்டதும் மற்றும் இத்திருக்கோயிலைச் சுற்றியுள்ள சேத்திரங்கள், தீர்த்தங்கள் மற்றும் மலைகள் ஆலயங்கள் பற்றிய விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. சோமசுந்தர பாண்டியன் (மலையத்துவச பாண்டியன்) ஆட்சிக் காலத்தில் சோமசுந்தர பாண்டியனுடய திருமகளாக அவதரித்த உமாதேவிக்கு செளந்திரபாண்டிய அரசனாக அவதரித்த சிவபெருமானுக்கு கூடலழகரே திருக்கல்யாண வைபவம் நடத்தி வைக்கப்பட்டதாக தலபுராணம் கூறுகிறது.
அருள்மிகு கூடலழகர் திருக்கோயில் வேகவதி, கிருதமாலை நதிகளுக்கு இடையில் வாழை மரங்கள் செறிந்த வனத்தில், நான்முகக் கடவுளின் மைந்தனான சனத்குமாரன் தேவசிற்பியான...தல புராணம்
அருள்மிகு கூடலழகர் தலபுராணம் பிரம்மாண்ட புராணத்தில் கதலீவன சேத்ரமகாத்மியத்தில் பன்னிரண்டு அத்தியாயங்களில் கூறப்பட்டிருக்கிறது, இப்புராணம் பிரம்மலோகத்தில் நாரதர் வேதவியாசருக்கு கூற, வேதவியாசர் சௌனகர் முதலிய ரிசிகளுக்கு அருளிச்செய்ததாக நைமிசாரணியத்தில் கூறப்படுகிறது. இப்புராணத்தில் இத்திருக்கோயிலின் அட்டாங்க விமானம் நிர்மாணிக்கப்பட்டதும் மற்றும் இத்திருக்கோயிலைச் சுற்றியுள்ள சேத்திரங்கள், தீர்த்தங்கள் மற்றும் மலைகள் ஆலயங்கள் பற்றிய விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. சோமசுந்தர பாண்டியன் (மலையத்துவச பாண்டியன்) ஆட்சிக் காலத்தில் சோமசுந்தர பாண்டியனுடய திருமகளாக அவதரித்த உமாதேவிக்கு செளந்திரபாண்டிய அரசனாக அவதரித்த சிவபெருமானுக்கு கூடலழகரே திருக்கல்யாண வைபவம் நடத்தி வைக்கப்பட்டதாக தலபுராணம் கூறுகிறது.
அருள்மிகு கூடலழகர் திருக்கோயில் வேகவதி, கிருதமாலை நதிகளுக்கு இடையில் வாழை மரங்கள் செறிந்த வனத்தில், நான்முகக் கடவுளின் மைந்தனான சனத்குமாரன் தேவசிற்பியான விஸ்வகர்மாவின் துணை கொண்டு நிர்மாணம் செய்யப்பட்ட, நெடிதோங்கி நிற்கும் அஷ்டாங்க விமானத்துடன் அமையப்பெற்ற சிறப்புமிக்க திருக்கோயிலாக தலபுராணம் மூலம் அறியப்படுகிறது.
இலக்கிய பின்புலம்
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் கூடலழகருக்குப் பல திருவிழாக்களை எடுத்து மகிழ்ந்தார். ஆவணித் திருவோணத்தில் கூடலழகருக்கு சிறப்பான வழிபாடுகள் செய்தார். இத்திருவிழா ஏழு நாட்களுக்கு நடைபெறும். அதனை மாங்குடி மருதனார் மதுரை காஞ்சியில் மாயோன் மேய ஓண நன்னாள் என்ற பாடலில் சிறப்பாக விளக்கப்பட்டு உள்ளது.இத்திருக்கோயில் சங்ககால பரிபாடல் மற்றும் சிலப்பதிகாரத்தின் மூலம் அறியப்படுகிறது. சங்ககால பரிபாடலில் கூடலழகர் பெருமாள் இருந்தையூர் அமர்ந்த செல்வன் (அமர்ந்த கோலம்) என்று போற்றப்படுகிறார்.
சிலப்பதிகாரத்தில் மாதரி என்னும் இடைக்குல மடந்தை ஆய்ச்சியர் வையைகரையில் உள்ள திருமாலை வணங்குவதை நீடுநீர் வையை நெடுமால் அடியேத்தித் என்ற பதத்தின் மூலம் குறிப்பிடப்படுகிறது. நீடுநீர் வையை நெடுமால் அடியேத்தித் என்பதற்கு அடியார்க்கு நல்லார்...தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் கூடலழகருக்குப் பல திருவிழாக்களை எடுத்து மகிழ்ந்தார். ஆவணித் திருவோணத்தில் கூடலழகருக்கு சிறப்பான வழிபாடுகள் செய்தார். இத்திருவிழா ஏழு நாட்களுக்கு நடைபெறும். அதனை மாங்குடி மருதனார் மதுரை காஞ்சியில் மாயோன் மேய ஓண நன்னாள் என்ற பாடலில் சிறப்பாக விளக்கப்பட்டு உள்ளது.இத்திருக்கோயில் சங்ககால பரிபாடல் மற்றும் சிலப்பதிகாரத்தின் மூலம் அறியப்படுகிறது. சங்ககால பரிபாடலில் கூடலழகர் பெருமாள் இருந்தையூர் அமர்ந்த செல்வன் (அமர்ந்த கோலம்) என்று போற்றப்படுகிறார்.
சிலப்பதிகாரத்தில் மாதரி என்னும் இடைக்குல மடந்தை ஆய்ச்சியர் வையைகரையில் உள்ள திருமாலை வணங்குவதை நீடுநீர் வையை நெடுமால் அடியேத்தித் என்ற பதத்தின் மூலம் குறிப்பிடப்படுகிறது. நீடுநீர் வையை நெடுமால் அடியேத்தித் என்பதற்கு அடியார்க்கு நல்லார் என்ற உரைஆசிரியர் தன் உரையில் நீடுநீர் வையை நெடுமாலை கூடலழகர் திருக்கோயிலில் மூன்றாவது நிலையில் எழுந்தருளியுள்ள சீராப்தி நாதரை (சயனக் கோலம்) குறிப்பது ஆகும்.